சென்னை: சென்னை சவுகார்பேட்டையில் நகை வியாபாரியிடம் போலீஸ் எனக்கூறி ரூ.1.40 கோடி கொள்ளையடித்த வழக்கில் பெண் கைது செய்யப்பட்டார். ரூ.1.40 கோடி கொள்ளையடித்த வழக்கில் தண்டையார்பேட்டையைச் சேர்ந்த மும்தாஜ் (33) கைது செய்யப்பட்டார். கடந்த 2ம் தேதி ஆந்திராவைச் சேர்ந்த நகை வியாபாரியிடம் போலீஸ் எனக்கூறி ரூ.1.40 கோடி கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளை வழக்கில் தலைமறைவாக உள்ள அப்துல் பாஷா என்பவரின் உறவினர் மும்தாஜ் ஆவார்.