டெல்லி: புல்வாமா தாக்குதலில் தங்களது உயிரை தியாகம் செய்த இந்திய வீரர்களை என்றும் மறக்க மாட்டோம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். வலுவான, வளர்ந்த இந்தியாவை உருவாக்க உயிரிழந்த வீரர்களின் தைரியம் நம்மை ஊக்குவிக்கிறது எனவும் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். 2019ல் பிப்ரவரி 14ல் பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் தங்களது உயிரை தியாகம் செய்தனர்.