×

குரூப்-4 தேர்வு முடிவை உடனே வெளியிட வேண்டும்: டிஎன்பிஎஸ்சிக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: குரூப்-4 தேர்வு முடிவை உடனடியாக டிஎன்பிஎஸ்சி வெளியிட வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 11 வகையான பணிகளுக்கு 7,301 பேரை தேர்வு செய்வதற்கான குரூப்-4 தேர்வு, கடந்த ஜூலை 24ம் தேதி நடத்தப்பட்டது. டிஎன்பிஎஸ்சி வெளியிட்டிருந்த அறிவிக்கையின் படி, ஜூலை மாதம் நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வுக்கான முடிவுகள் கடந்த அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். நவம்பர் மாதத்தில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அவர்களின் உணர்வுகளை தேர்வாணையம் மதிக்க வேண்டும். குரூப்-4 பணிகளுக்கான போட்டி தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் உடனடியாக வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Ramadas ,DNSC , Group-4 exam result should be released immediately: Ramadoss urges TNPSC
× RELATED வணிகர்கள் அவதிப்படுவதால்...