×

சிறுமிக்கு பாலியல் தொல்லை: மளிகை கடைக்காரர் போக்சோவில் கைது

தண்டையார்பேட்டை: ராயபுரத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடைக்காரரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர். ராயபுரம் பெரியண்ணன் தெருவை சேர்ந்த 10வயது சிறுமி, நேற்று காலை மீனாட்சி அம்மன்பேட்டை பஜனை கோயில் தெருவில் உள்ள மளிகை கடையில் தேங்காய் வாங்க சென்றுள்ளார்.

அப்போது, மளிகை கடை உரிமையாளர், சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து, சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், இதுகுறித்து ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, சிறுமியிடம் தவறாக நடந்ததாக கடை உரிமையாளர் மகபூப் (62), என்பவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Pocso , Sexual harassment of girl: Grocer arrested in Pocso
× RELATED பாலியல் தொல்லை தொழிலாளிக்கு 5 ஆண்டுகள்...