×

அடுத்தடுத்து 4 வீடுகளில் கைவரிசை: 27 சவரன், ரூ.3 லட்சம் கொள்ளை வழக்கில் 3 ரவுடிகள் சிக்கினர்

அண்ணாநகர்: அடுத்தடுத்து 4 வீடுகளின் பூட்டை உடைத்து 27 சவரன், ரூ.3 லட்சம், 2 லேப்டாப் ஆகியவற்றை கொள்ளையடித்த வழக்கில் 3 ரவுடிகளை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 7 சவரன், லேப்டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள 2  பேரை வலை வீசிதேடி வருகின்றனர்.

சென்னை திருமங்கலம் கதிரவன் காலனியை சேர்ந்தவர் ராம்குமார் (38). இவர், திருவான்மியூரில் உள்ள ஐடி கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 27 சவரன், ஒரு கிலோ வெள்ளி பொருட்களை 5 பேர்  கொள்ளையடித்துவிட்டு தப்பினர். இதேப்போல், முகப்பேர் ஐஸ்வந்த் நகர் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (40) என்பவரின் ரியல் எஸ்டேட் அலுவலகத்தின் பூட்டை  உடைத்து, ரூ.3 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

இதேபோல், கொரட்டூர் பகுதியில் அடுத்தடுத்து 2 வீடுகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள், 2 லேப்டாப்களை கொள்ளையடித்து சென்றனர். இதுசம்பந்தமாக திருமங்கலம், நொளம்பூர் போலீசார் நடத்திய விசாரணையில், திருமங்கலம், நொளம்பூர், கொரட்டூர் ஆகிய பகுதியில் கைவரிசை காட்டியது பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த ரவுடிகள் மகபூல் பாட்ஷா (எ) பப்லு (24), காட்டுப்பாக்கம் பகுதியை சேர்ந்த விக்கி (எ) விக்னேஷ் (22), முத்துகுமார் (எ) ஓட்டை முத்து (23) என்பது  தெரியவந்தது. அவர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்து 7 சவரன், 300 கிராம் வெள்ளி, 2 லேப்டாப்களை பறிமுதல் செய்தனர். பின்னர், அவர்களை சிறையில் அடைத்தனர்.இதில், தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் 2 பேரை தேடி வருகின்றனர்.

Tags : Savaran , 4 successive houses raided: 27 Savaran, 3 raiders caught in Rs 3 lakh robbery case
× RELATED சென்னை ராயபுரத்தில் பாதுகாப்பு கருதி...