×

முதியவருக்கு கத்திகுத்து: ரவுடி கைது

அண்ணாநகர்:  சென்னை பாடிக்குப்பம் ரோடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (52), கொத்தனார். அதே பகுதியை சேர்ந்தவர் ரவுடி ஜான்பாஷா (36). கடந்த 10ம் தேதி, திருமங்கலம் பகுதியில் இவர்களிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ஜான்பாட்ஷா, தனது நண்பருடன்  சேர்ந்து சுப்பிரமணியை சரமாரியாக தாக்கி, கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பிச்சென்றார்.

இதில், படுகாயமடைந்த சுப்பிரமணியை அக்கம்பக்கத்தினர் மீட்டு, 108 ஆம்புலன்ஸ்  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புகாரின்பேரில், திருமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து ரவுடி ஜான்பாஷாவை நேற்று முன்தினம்   கைது செய்தனர். பின்னர், அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளியை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags : Rowdy , Elderly man stabbed: Rowdy arrested
× RELATED கட்சியில் ரவுடியை சேர்க்கவே ஐபிஎஸ்...