×

69 ரோகிங்கியா அகதிகள் அந்தமான் வந்தனர்

போர்ட்பிளேர்:  வங்கதேசத்தில் இருந்து 69 ரோகிங்கியா அகதிகள் நேற்று மோட்டார்படகு மூலமாக அங்கிருந்து இந்தோனேஷியா புறப்பட்டனர். ஆனால் மோசமான வானிலை காரணமாக படகு அந்தமான் மற்றும் நிகோபரை வந்தடைந்தது. மேலும் படகில் எரிபொருளும் தீர்ந்துவிட்டதாக தெரிகின்றது.  இந்த படகில் 19 ஆண்கள், 22 பெண்கள் மற்றும் 28 குழந்தைகள் இருந்தனர்.

தகவல் அறிந்த கடலோர காவல்படையினர், போலீசார் மற்றும் பேரிடர் மேலாண்மை குழுவினர் அங்கு விரைந்தனர். படகில் வந்தவர்களின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் பரிசோதனை நடத்தினார்கள். அவர்களுக்கு உணவு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து உள்துறை மற்றும் வெளியுறவு துறை அமைச்சகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : Andaman , 69 Rohingya refugees arrived in Andaman
× RELATED சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அந்தமான் சிறையில் ஜனாதிபதி மரியாதை