சென்னை: திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்ட வாழ்த்து: கோவை-திருப்பூர் நண்பர் சி.பி.ராதாகிருஷ்ணனை குடியரசு தலைவர் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக நியமித்துள்ளார் என்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். தமிழர் ஒருவர் இப்படிப் பொறுப்பேற்பது சிறப்பு தான். அரசியல் பிரமுகர் என்ற நிலை தாண்டி, ஒரு பொது மனிதராகக் கடமையாற்றி, அரசியல் சட்டத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாத்து சிறப்பாகப் பணிபுரிவர் என்று நம்பி வாழ்த்துகளை கொள்கை வேறுபாடுகளையும் தாண்டி தெரிவித்துக் மகிழ்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.