×

வண்டலூர் அருகே பட்டப்பகலில் பயங்கரம்; மீன் வியாபாரி படுகொலை: பைக்கில் வந்த 4 பேர் கும்பலுக்கு வலை

கூடுவாஞ்சேரி: வண்டலூர் அருகே இன்று மதியம் மீன் வியாபாரியை 4 பேர் கும்பல் வீச்சரிவாளால் சரமாரி வெட்டி கொலை செய்தது. பட்டப்பகலில் நடந்த இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வண்டலூர் அருகே மண்ணிவாக்கம், மேட்டு தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் (45). இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனர். சரக்கு வேன் ஓட்டி வந்த பார்த்திபன், வண்டலூர் ஊராட்சிக்குட்பட்ட ஓட்டேரி அரசு மேல்நிலை பள்ளி அருகே மீன்கடை நடத்தி வந்தார்.
இந்நிலையில், இன்று காலையில் வழக்கம் போல கடைக்கு வந்து மீன் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார் பார்த்திபன்.

மதியம் 12 மணியளவில் 4 பேர் கொண்ட மர்ம கும்பல் பைக்கில் கடைக்கு வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் பார்த்திபனை சுற்றி வளைத்து, வீச்சரிவாளால் சரமாரி வெட்டியது. இதில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பார்த்திபன் அலறியபடியே கீழே சுருண்டு விழுந்து இறந்தார். இந்த சம்பவத்தை பார்த்ததும் அங்கிருந்த பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். சிறிது நேரத்தில் அந்த கும்பல் பைக்கில் தப்பி சென்றது. தகவலறிந்து ஓட்டேரி இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

பார்த்திபனின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொழில் போட்டியா அல்லது முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். மேலும், அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகள் மூலம் 4 பேர் கும்பலை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Tags : Vandalur ,Fishmonger massacre , Panic in broad daylight near Vandalur; Fishmonger massacre: 4 bike-borne gang nabbed
× RELATED கோடை விடுமுறையை முன்னிட்டு இன்று வண்டலூர் உயிரியல் பூங்கா இயங்கும்