×

மீனவர்கள் பிரச்னை குறித்து விரைவில் தீர்வு காணப்படும்: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பேட்டி

சென்னை: இலங்கையில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜ தலைவர் கே.அண்ணாமலை ஆகிய இருவரும் 3 நாள் பயணத்தை முடித்துவிட்டு, விமானம் மூலமாக நேற்று சென்னை திரும்பினர். பின்னர், விமான நிலையத்தில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சர்வதேச கடல் எல்லையில் தமிழக மீனவர்களின் பிரச்னை குறித்து பேசப்பட்டது. இலங்கை சிறைகளில் நேற்று வரை, ஒரு இந்திய மீனவர்கூட இல்லை. தமிழக மற்றும் பல்வேறு மாநில மீனவர்களின் படகுகளை விடுவிப்பது பற்றி ஏற்கனவே, ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் நானும் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையும் வலியுறுத்தி இருக்கிறோம். இதன் தொடர்ச்சியாக, தற்போது இருதரப்பு அமைச்சர்கள் அளவில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இப்பிரச்னைக்கு விரைவில் சுமுக தீர்வு காணப்படும்.

Tags : Union Minister ,L. Murugan , The problem of fishermen will be resolved soon: Union Minister L. Murugan interview
× RELATED முதல்முறை வாக்காளர்கள் வேகமாக...