சென்னை: வரும் 27ம் தேதி நடைபெறும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், வரும் 19, 20, 21 ஆகிய தேதிகளில் பிரசாரம் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், நேற்று மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், அது தவறான தகவல் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், வரும் 19ம் தேதி ஞாயிறு அன்று ஒருநாள் மட்டுமே ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து கமல்ஹாசன் பிரசாரம் செய்ய இருக்கிறார் என்றும், அந்நாளில் காந்தி சிலை கருங்கல்பாளையம், சூரம்பட்டி நால்ரோடு, சம்பத் நகர், வீரப்பன் சத்திரம், அக்ரஹாரம் ஆகிய பகுதிகளில் கமல்ஹாசன் பிரசாரம் செய்வார் என்றும் கூறப்பட்டுள்ளது.