×

புதுச்சேரி ஆளுநர் தலையீட்டால் பாஜவுக்கு அடிபணிந்து ஆட்சி நடத்தும் ரங்கசாமி: நாராயணசாமி குற்றச்சாட்டு

காரைக்கால்: காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் கட்சியினரின் இந்திய ஒற்றுமை நடைப்பயண பேரணி நேற்று நடைபெற்றது. புதுச்சேரி முன்னாள் வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி. மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர். அப்போது நாராயணசாமி பேசுகையில், ‘புதுச்சேரியில் தற்பொழுது நடைபெறும் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜ கூட்டணி ஆட்சி ஊழலின் ஆட்சியாக உள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து தினமும் கொலைகள், கொள்ளைகள், வீடுகள் அபகரிப்பு ஆகியவை தாராளமாக நடைபெற்று வருகிறது. பொதுமக்களுக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. ரேஷன் கடைகளே இல்லாத மாநிலத்தில், ரேஷன் அட்டைகளை கொடுத்து, ரேஷன் பொருட்களும் கொடுக்காமல் பொதுமக்களை வஞ்சிப்பதாக உள்ளது. புதுச்சேரி நிர்வாகத்தில் ஆளுநர் தலையீட்டால் முதல்வர் ரங்கசாமி, பாஜவுக்கு அடிபணிந்து அடிமை ஆட்சியை நடத்துகிறார்’ என்று தெரிவித்தார்.

Tags : Rangasamy ,BJP ,Puducherry ,Governor ,Narayanasamy , Rangasamy is subordinating to BJP due to Puducherry Governor's intervention: Narayanasamy alleges
× RELATED பாஜ கூட்டணி கட்சி ஆதரவாளர் வீட்டில்...