×

சக பெண் ஊழியரை 2 முறை கர்ப்பமாக்கிய விவகாரம்; சட்டப்பல்கலைக்கழக நூலக ஊழியர் கைது: தேனாம்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நடவடிக்கை

சென்னை: அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழக சக பெண் ஊழியரை திருமணம் செய்வதாக 2 முறை கர்ப்பமாக்கிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த தற்காலிக நூலக ஊழியரை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் ராணி(பெயர்மாற்றப்பட்டுள்ளது) என்பவர் நூலக ஊழியராக பணியாற்றி வருகிறார்.

இவருடன் திருச்சி துறையூர் பகுதியை சேர்ந்த மணியரசு(29) என்பவரும் தற்காலிக நூலக ஊழியராக பணியாற்றி வந்தார். தற்காலிக ஊழியர்களான இருவரும் ஒரே இடத்தில் பணியாற்றி வருவதால், இவர்களின் நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இதனால் இருவரும் பல இடங்களுக்கு சென்று தனிமையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே மணியரசுக்கு அவரது பெற்றோர் பெண் பார்த்து நிச்சயிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெண் நூலக ஊழியர் ராணிக்கு தெரியவந்தது.

உடனே தனது காதலனான மணியரசுவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி கூறியுள்ளார். ஆனால் அவர் பல காரணங்களை கூறி திருமணம் செய்ய மறுத்து, ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ராணி, தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நியைத்தில், தனது காதலன் மணியரசு மீது புகார் அளித்தார். அந்த புகாரின் படி போலீசார் விசாரணை நடத்தினர், அதில், நூலக ஊழியர் மணியரசு சக பெண் ஊழியரான ராணியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பல இடங்களுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்து வந்தது  தெரியவந்தது. இதனால் பெண் ஊழியர் 2 முறை கர்ப்பமாகவும் இருந்துள்ளார். அந்த கர்ப்பத்தை மணியரசு வலியுறுத்தலின் பெயரில் கலைத்ததும் விசாரணையில் தெரியவந்தது.

அதைதொடர்ந்து போலீசார்  அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழக தற்காலிக நூலக ஊழியர் மணியரசு மீது ஐபிசி 376(கற்பழிப்பு), 312(கர்ப்பத்தை கலைத்தல்), 417 (ஏமாற்றுதல்), 506(2)(கொலை மிரட்டல்) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். போலீசார் தன் மீது வழக்கு பதிவு செய்த தகவலை அறிந்த மணியரசு தலைமறைவாகிவிட்டார்.

இதையடுத்து தலைமறைவாக இருந்து வந்த மணியரசுவை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், மணியரசு தனது வழக்கறிஞருடன் நேற்று நள்ளிரவு தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அதைதொடர்ந்து போலீசார் முறைப்படி மணியரசுவை கைது செய்தனர். பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதற்கான ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகின்றனர்.

Tags : Law University Library ,Thenampet , A case of impregnating a female colleague 2 times; Law University Library Staff Arrested: Thenampet All Women Police Operation
× RELATED சென்னை தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி....