சென்னை: சென்னை ஜெ. எல். நகைக்கடையில் 9 கிலோ தங்கத்தை கொள்ளையடித்த கும்பலை பிடிக்க ஆந்திர விரைந்ததுள்ளனர் தனிப்படையினர். கொள்ளையர்கள் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திரா தப்பித்து சென்றதாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. நகைக்கடை கொள்ளையர்களை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் ஆந்திரா மாநிலத்திற்கு விரைந்துள்ளனர்.