அங்காரா: துருக்கியில் பிப்.6ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. மாலத்யா நகரில் உள்ள ஹோட்டலின் இடிபாடுகளுக்குள் இருந்து இந்தியாவை சேர்ந்த விஜய்குமாரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தில் உயிரிழந்த விஜய்குமார், உத்தராகண்ட் மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் என தகவல் வெளியாகியுள்ளது.