×

ராயப்பேட்டையில் பஸ் சக்கரத்தில் சிக்கி ஐ.டி. பெண் ஊழியர் பலி

சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு அஜிஸ் முல்லக் தெருவை சேர்ந்தவர் பிரியங்கா (22). கிண்டியில் உள்ள ஐடி கம்பெனி ஒன்றில் பணியாற்றி வந்தார். இவர், நேற்றிரவு தனது அண்ணன் ரிஷிநாதனுடன் (23) பைக்கில் ராயப்பேட்டை நோக்கி சென்றார். பீட்டர்ஸ் சாலை அருகே வரும் போது, முன்னால் சென்ற மாநகர பஸ் முந்தி செல்ல முயன்ற போது எதிரே வந்த அடையாளம் தெரியாத மற்றொரு பைக் உரசியதில் பின்னால் இருந்த பிரியங்கா நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

அந்த நேரத்தில் பிரியங்கா மீது பஸ் ஏறி இறங்கியது. ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்தார். பிரியங்காவின் அண்ணன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். படுகாயமடைந்த பிரியங்காவை மீட்டு ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பிரியங்கா இரவு உயிரிழந்தார்.

Tags : Rayapet ,I.S. TD , I.D got stuck in the wheel of a bus in Rayapetta. Female employee killed
× RELATED சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். அருகே...