சென்னை: ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்பு பணிகளுக்கான தேர்வுகளில் வெற்றி பெற்றோருக்கு பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு நிறைவடைந்து பல மாதங்கள் ஆகியும் பணி ஆணை வழங்கப்படவில்லை. தாமதப்படுத்தாமல் பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.