திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சிமெண்ட் உற்பத்தி ஆலைக்கு சொந்தமான கல்குவாரியில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. கல்குவாரியில் கை, கால் கட்டப்பட்ட நிலையில் 28 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் நேற்று கண்டெடுக்கப்பட்டது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் திருச்சியைச் சேர்ந்த மாடுபிடி வீரர் மணி என்பது தெரியவந்தது.