×

ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற போலீசாருக்கு பெண் சாமியார் ‘பளார்’

மேல்மலையனூர்: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் சேத்பட் செல்லும் சாலை செக்கடிகுப்பம் கிராமத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை வட்டாட்சியர் அலெக்சாண்டர் தலைமையில் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணி நேற்று நடைபெற்றது. 3 கான்கிரீட் வீடுகள், ஒரு கூரை வீடு, 70வது சென்ட் நிலம் ஆக்கிரமிப்பில் இருந்ததை மீட்டனர். அச்சமயம் அரசு நிலத்தில் கோயில் கட்டி வழிபாடு நடத்தி வந்த பெண் சாமியார் செந்தாமரை பெரிய கத்தியை வாயில் கவ்விக் கொண்டு சாமி வந்தது போல் நடித்து போலீசாரை மிரட்டி ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தார். தொடர்ந்து, தற்கொலை செய்து கொள்வேன் என கூறி மயக்கம் வந்தது போல் பெண் சாமியார் கீழே படுத்தார். அவரை, போலீசார் கையை பிடித்து தூக்கி எழுப்பிய போது சாமியார், பெண் காவலரின் கன்னத்தில் பளார் என அடித்தனார். இதனால், போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


Tags : Palar , Female preacher 'Palar' to the police who went to clear the encroachment
× RELATED பெண் எஸ்ஐக்கு ‘பளார்’ பைனான்ஸ் ஊழியர் கைது