×

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிக்கு பாடுபடுவோம்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிக்கு பாடுபட உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாலவாக்கம் கடற்கரை அருகே கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு பேசிய அவர், இலங்கையில் பெயரளவில் மட்டுமே உள்ள 13வது சட்டத்திருத்தம் விவகாரம் தொடர்பாக பேச இலங்கை செல்ல உள்ளதாக தெரிவித்தார். இலங்கை வசமுள்ள தமிழக மீனவர்களின் 111 படகுகளை மீட்பது குறித்து அந்நாட்டு மீன்வளத்துறை அமைச்சருடன் ஒன்றிய இணை அமைச்சர் முருகன் பேச உள்ளதாகவும் அவர் கூறினார்.

இலங்கை பயணத்தை முடித்துவிட்டு திரும்பியதும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிக்கு பாடுபட உள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் தமக்கு பதில் மூத்த பாஜக தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் பங்கேற்பார் எனவும் அண்ணாமலை தெரிவித்தார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பெரும் களேபரங்களுக்கு நடுவே அதிமுகவின் தென்னரசு, இரட்டை சிலை சின்னத்தில் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இன்று ஈரோட்டில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெறுகிறது.


Tags : Erode East Module ,Elections ,Rajya Leader ,Anamalai ,President of State , Erode by-election, ADMK wins, Annamalai
× RELATED மக்களவை தேர்தல்: திரிபுராவில் 54.47% வாக்குப்பதிவு