×

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நோபல் பரிசு கொடுங்கள்!: அணில்களால் மின்தடை என்ற கருத்தை சுட்டிக்காட்டி முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்..!!

மதுரை: மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்று முன்னாள்  அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வைகை நீரை தெர்மாகோல் கொண்டு மறைக்க முயன்றதற்காக தன்னை நவீன விஞ்ஞானி என திமுகவினர் கிண்டல் செய்ததாக குறிப்பிட்டார். இப்பொது மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தன்னை மிஞ்சி அணிலை கண்டுபிடித்துள்ளதாகவும் அதனால் தான் பிழைத்துக் கொண்டதாகவும் செல்லூர் ராஜு குறிப்பிட்டுள்ளார். 
அதிமுக ஆட்சியில் எல்லா அணிகளும் வெளிநாடு சென்றுவிட்டதை போன்றும் தற்போதைய ஆட்சியில் தான் அணில்கள் மின்கம்பியில் செல்கிறது என்பதை கண்டுபிடித்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நோபல் பரிசு அளிக்க வேண்டும் என்றும் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார். தமிழகத்தில் செடி, கொடிகளால் மட்டும் மின்வெட்டு பிரச்சனை ஏற்படுவதில்லை. அதன் மேலே ஓடும் அணில் இரண்டு வயர்களை உரசுவதாலும் மின் துண்டிப்பு ஏற்படுகிறது. அதனால் மின்தடை ஏற்படுவதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருந்தார். 

The post அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நோபல் பரிசு கொடுங்கள்!: அணில்களால் மின்தடை என்ற கருத்தை சுட்டிக்காட்டி முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Senthil Balaji ,Chellore Raju ,Madurai ,Former minister ,Sellore Raju ,power ,Squirrels ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கை மே 6-ம்...