சென்னை: யாழ்ப்பாணம் கலாசார மையம் திறப்பு விழாவில் பங்கேற்க, ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் நான்கு நாட்கள் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்ெகாள்கிறார். இலங்கை யாழ்ப்பாணத்தில், 4 நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க, அந்நாட்டில் 12ம் தேதி வரை ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். அவர் வடக்கு மாகாணத்தின் வளர்ச்சிக்காக இந்தியா வழங்கிய மானியத்தின் கீழ் கட்டப்பட்ட திட்டங்களைப் பார்வையிடுகிறார்.
யாழ்ப்பாணம் கலாசார மையமானது இந்தியா இலங்கைக்கு இடையேயான நல்லுறவுக்கான எடுத்துக்காட்டு ஆகும். இந்த அதிநவீன மையமானது அருங்காட்சியகம் 600க்கும் மேற்பட்ட மக்கள் அமரக்கூடிய கலையரங்கம், 11 மாடி அதிநவீன நூலகம் மற்றும் திறந்த வெளி அரங்கம், பொது சதுக்கம் போன்ற பல வசதிகளைக் கொண்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.