×

குட்கா, பான்மசாலா வழக்கில் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு

புதுடெல்லி: தமிழக உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின்கீழ் தமிழகத்தில் குட்கா, பான் மசாலா, சுவையூட்டப்பட்ட புகையிலைப் பொருள்களுக்கு தடைவிதித்து உணவுப் பாதுகாப்புத்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இதை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில்   மேல்முறையீட்டு மனுவை நேற்று தாக்கல் செய்துள்ளார்.  இந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வருகிறது.



Tags : Tamil Nadu government ,Supreme Court ,Gutka ,Panmasala , Tamil Nadu government appeals in Supreme Court in Gutka, Panmasala case
× RELATED அனைத்து மாவட்டங்களிலும் சதுப்புநிலம்...