இமாச்சலப்பிரதேசம்: இமாச்சலப்பிரதேசத்தில் சம்பா மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால் பாலம் இடிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இமாச்சலப்பிரதேசத்தின் பார்மூர் பகுதியில் உள்ள லூனா என்ற இடத்தில் நிலச்சரிவின் போது ராட்சத பாறை உருண்டு விழுந்தது. 20 மீட்டர் நீளம் உள்ள பாலத்தின் மீது அந்த பாறை விழுந்ததால் சம்பா-பார்மூர் இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டது.