×

4 பெண்கள் உயிரிழப்புக்கு சரத்குமார் இரங்கல்

சென்னை: வாணியம்பாடியில் தனியார் நிறுவன வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சியில் உயிரிழந்து 4 பெண்களுக்கு சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: வாணியம்பாடியில் நடைபெற்ற தனியார் நிறுவனம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியின் போது ஆயிரக்கணக்கானோர் ஒரே இடத்தில் குவிந்ததால், கூட்ட நெரிசலில் சிக்கி ஏராளமா னோர் மயக்கமடைந்தும், 4 பெண்கள் உயிரிழந்திருப்பதும் துரதிர்ஷ்டவசமானது.

மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்த பெண்களின் குடும்பத்தார்க்கு  எனது ஆழ்ந்த இரங்க  லைத் தெரிவித்துக் கொண்டு, படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்கள் விரைவில் பூரண நலம் பிரார்த்திக்கிறேன்.


Tags : Sarathkumar , Sarathkumar mourns the death of 4 women
× RELATED பிரசாரத்துக்கு நடுவே கொஞ்சம் டான்ஸ்.....