சென்னை: தென்மண்டலத்தில் மொத்தமாக 624 கஞ்சா குற்றவாளிகள் மீது குற்ற சரித்திர பதிவேடு தொடங்கப்பட்டுள்ளதாக ஐஜி அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார். கஞ்சா, போதை வஸ்துகளை விற்பனை செய்யும் சமூக விரோதிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குற்றவாளிகள், அவர்களது உறவினர்களின் அசையும், அசையா சொத்துகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் ஐஜி அஸ்ரா கார்க் தெரிவித்தார்.