சென்னை: சென்னை போரூரில் வசித்து வந்த திரைப்பட இயக்குனர் சண்முகப்பிரியன் (71), சென்னை போரூர் தனியார் மருத்துவமனையில் நேற்று மாரடைப்பால் திடீரென்று மரணம் அடைந்தார்.
தமிழில் ‘ஒருவர் வாழும் ஆலயம்’, ‘பாட்டுக்கு நான் அடிமை’, ‘மதுரை வீரன் எங்க சாமி’, ‘உதவும் கரங்கள்’ ஆகிய படங்களை இயக்கியுள்ள அவர், தமிழில் ‘வெற்றிவிழா’, ‘பிரம்மா’, ‘சின்ன தம்பி பெரிய தம்பி’ உள்பட 50க்கும் மேற்பட்ட படங்களுக்கு கதை மற்றும் வசனம் எழுதியுள்ளார். அவரது திடீர் மறைவுக்கு தமிழ்த் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.