திருப்பூர்: தமிழரிடம் வடமாநிலத்தவர் பணம் பறிப்பது போன்ற வீடியோ பொய்யானது, வதந்திகளை நம்ப வேண்டாம் என திருப்பூர் மாவட்ட போலீசார் கூறியுள்ளனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட வீடியோவில் உள்ள நபரின் வாக்குமூலத்தையும் இணைத்து திருப்பூர் காவல்துறையினர் விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளனர். சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவோர் மீது சட்டப்படி கடும் நவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.