×

மெரினாவில் பேனா சிலை வைக்க வேண்டும்: காயத்திரி ரகுராம் ஆதரவு

சென்னை: மெரினாவில் பேனா சிலை வைக்க நடிகை காயத்திரி ரகுராம் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: புயல்களால் கூட சேதப்படுத்த முடியாத அளவு இந்த பேனா வலுவாக இருக்க வேண்டும். இந்த பேனா தமிழ்நாடு மக்களின் ஜனநாயகக் குரலாக இருக்க வேண்டும். மக்களின் பல லட்சம் வரிப் பணம் ஒரு மாநிலத் தலைவரின் இசட் பிரிவுப் பாதுகாப்பிற்குப் பயன்படுத்தப்படும்போது, தமிழ்நாடு மக்களின் வரிப் பணம் ஜனநாயகத்தைக் குறிக்கும் பேனா சிலைக்கு பயன்படுத்துவது சரிதான்.மாநிலத்திற்கு, நாட்டிற்கு சேவைக்காகவும், உதவுவதற்காகவும் ஒரு கட்சியில் நாம் சேர வேண்டும். ஆனால் வசூல் ராஜா முன்னாள் ஐபிஎஸ் ஒன்றும் சாதிக்காமல் புகழ்ந்து பாடுவது என்னுடைய சேவை அல்ல. பேனாவுக்கு ஏன் பொதுமக்களின் பணம்? இந்த பேனா சிலை வித்தியாசமானதாகவும், ஒரு சுவாரஸ்யமான சுற்றுலா தலமாக இருந்தால், சுற்றுலா மூலம் அரசாங்கம் லாபம் ஈட்டினால் அதை அரசுப் பள்ளிகள், பல்கலைக்கழகங்களுக்கு அல்லது மருத்துவமனைகளுக்கு பயன்படுத்தலாம். அது அரசாங்கத் திட்டத்தைப் பொறுத்தது.இவ்வாறு தனது பதிவில் கூறியுள்ளார்.

Tags : Gayathri Raghuram , Pen statue to be placed in marina: Gayathri Raghuram supports
× RELATED எப்படியெல்லாம் பொய் பேசுவாங்கனு 10...