×

ஜார்கண்ட் மாநில தீ விபத்தில் உயிர் இழந்தோர் குடும்பங்களுக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம் அறிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி

கொல்கத்தா: ஜார்கண்ட் மாநிலத்தில் அடுக்குமாடி கட்டிட்டம் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 14 பேர் பரிதாபமாக உயிர் இழந்துள்ளனர். படுகாயத்துடன் பலரும் மீட்கப்பட்டுள்ளதால் உயிர் இழப்பு அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.

ஜார்கண்ட் மாநிலம் ஆசிர்வத் டவர் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் 5வது தலத்தில் ஒரு வீட்டில் பிடித்த தீ அடுத்தடுத்து 6ம் மற்றும் 7ம் தலங்களுக்கு பரவியது தகவல் அரித்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க போராடினர், எனினும் இந்த தீ விபத்தில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 14 பேர் உயிர் இழந்துள்ளனர். பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது, வீடுகளுக்குள் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணியில் தீவிபத்து மீட்பு குழுவினர் ஈடுபட்டுவருகின்றனர். தீ விபத்தில் உயிர் இழந்தோர்க்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி உயிர் இழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தல ரூ. 2 லட்சம், காயம் அடைத்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் நிவாரணம் வழங்க உத்தரவு அளித்துள்ளார்.


Tags : Jharkhand fire accident ,Narendra Modi , 14 people, including children, women, died in a fire in Jharkhand
× RELATED நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி...