×

லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா வருவோம்: ஜெயக்குமார் பேட்டி

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நியாயமாக நடத்தக் கோரி தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் அதிமுக மனு அளித்துள்ளது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்; இடைத்தேர்தல் நியாயமாகவும், அமைதியாகவும், அதிகார துஷ்பிரயோகம் கட்டவிழ்த்து விடும் நிலையை தவிர்த்து சுதந்திரமாக தேர்தலை நடத்த வேண்டும். 7ம் தேதி வரை காலம் உள்ளது, வேட்பாளர் யார் என்பதை சொல்வோம், களத்தில் நாங்கள் தான் இருக்கிறோம், நாங்கள்தான் வெல்வோம். லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா வருவோம் எனவும் கூறினார்.



Tags : Laetta ,Jayakkumar , Even if it comes late, we will come later: Jayakumar interview
× RELATED பாஜகவின் சோதனை பூச்சாண்டிக்கெல்லாம்...