×

இந்திய சமூகங்களுக்கிடையே ஒற்றுமை ஏற்படுத்திட அமைதி வழியில் போராடியவர் அண்ணல்: முதல்வர் டிவீட்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டர் பதிவு: இந்தியா என்னும் உயர்ந்த சிந்தனையைக் கட்டமைக்க தனது உடல், பொருள் என அனைத்தையும் ஈந்து இந்நாட்டின் உயிராகிப் போனவர், காந்தியடிகள். இந்திய சமூகங்களுக்கிடையில் ஒற்றுமை ஏற்படுத்திட அமைதி வழியில் போராடிய அவர், ஒரு மதவெறியனின் வன்முறைக்குப் பலியான இந்நாளில், ஒற்றுமை மிளிரும் சமூகமாகத் திகழ்ந்திட நாம் ஒவ்வொருவரும் உறுதியேற்போம்.


Tags : Annal ,Chief Minister , Annal fought for peace and brought unity among Indian communities: Chief Minister Dweet
× RELATED அண்ணல் நபிகளின் வழியில் வாழ்ந்து...