ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், எஸ்டிபிஐ கட்சியினர் தனியாக போட்டியிட போவதாக அறிவித்திருந்தினர். இந்நிலையில் நேற்று அக்கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், ஈரோட்டில் உள்ள எஸ்டிபிஐ கட்சி அலுவலகத்திற்கு வந்திருந்தார். அப்போது அவரை ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் சந்தித்து, தனக்கு ஆதரவு வழங்கும்படி கேட்டு கொண்டார். இதை ஏற்று, அவர்கள் போட்டியிடுவதை தவிர்த்து, காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்தனர்.