×

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள மசூதியில் வழிபாட்டு நேரத்தில் குண்டு வெடித்ததில் 17 பேர் உயிரிழப்பு

பெஷாவர்: பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள மசூதியில் மதியம் வழிபாட்டு நேரத்தில் குண்டு வெடித்ததில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்து சிதறியதில் மசூதியின் ஒரு பகுதி சேதம் அடைந்துள்ளது.

குண்டுவெடிப்பில் காயம் அடைந்த 80 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக போலீஸ் தகவல் தெரிவித்துள்ளனர். தீவிரவாதி ஓருவர் உடலில் குண்டு கட்டி இருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்ததாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். போலீஸ் குடியிருப்புகள் அதிகம் இருக்கும் இடத்தின் ஒரு பகுதியில் உள்ள மசூதியில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. மக்களிடையே பயத்தை ஏற்படுத்துவதற்கான பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று பாகிஸ்தான் பிரதமர் கூறியுள்ளார்.

மசூதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாக். பிரதமர் கடும் கண்டனம் தெரிவித்தவுள்ளார்.  குண்டுவெடிப்பில் 18 பேர் கொல்லப்பட்டதாகவும், 90 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் மருத்துவமனை தரப்பில் கூறியுள்ளனர். காயமடைந்த 30-க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள மசூதியில் இன்று மதியம் வழக்கம்போல தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்ட நிலையில் திடீரென அங்கு பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் பயங்கரவாதி ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க செய்ததாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் மசூதி கட்டிடடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 17 பேர் பலியாகி உள்ளதாகவும், 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

அதேசமயம் கட்டிடடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பலர் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. மீட்பு பணி துரிதமாக நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை உயரலாம் என போலீஸ் தரப்பில் அச்சம் தெரிவித்துள்ளனர். போலீஸ் குடியிருப்புகள் அதிகம் கொண்ட பகுதியின் ஒரு மசூதியில் இந்த குண்டுவெடிப்பு நடந்திருப்பதாக தகவல்கள் தெரிவித்துள்ளனர்.


Tags : Peshawar, Pakistan , At least 17 people were killed in a bomb blast at a mosque in Peshawar, Pakistan
× RELATED பாகிஸ்தானின் பெஷாவரில் குண்டு வெடித்து ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்..!!