×

ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க வங்க தேச பிரதமர் இந்தியா வருகிறார்

டாக்கா: வங்கதேச பிரதமர் ஷேக்அசீனா ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வரவுள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன. கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதி ஜி20 நாடுகளின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றது. ஜி20 உச்சி மாநாடு தொடர்பாக இந்தியா முழுவதுமுள்ள நாடுகளில் 200க்கும் மேற்பட்ட கூட்டங்களை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று வங்கதேச பிரதமர் ஷேக்அசீனா இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியா வருவார் என எதிர்பார்ப்பதாக வௌியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Tags : Bangladesh ,India ,G20 Summit , Bangladesh Prime Minister is coming to India to participate in G20 summit
× RELATED பங்களாதேஷ் நாட்டில் இருந்து...