×

மேட்டூரிலிருந்து மேலும் தண்ணீர் திறக்க வேண்டும்: டிடிவி வலியுறுத்தல்

சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘மழை வெள்ள பாதிப்புகளால் சம்பா சாகுபடி ஒரு மாத காலம் தாமதமாக தொடங்கியதால் பயிர்கள் இன்னும் அறுவடைக்கு தயார் நிலையை எட்டவில்லை.  மேட்டூரில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டிருப்புதால்,   சுமார் 2 லட்சம் ஏக்கர் விவசாய நிலம் பாதிப்புக்குள்ளாகும்.

எனவே, விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று மேலும் 15 நாட்களுக்கு தண்ணீரைத் திறக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்’ என்று தெரிவித்து உள்ளார்.

Tags : Mettur ,TTV , Mettur, water should be opened, insists DTV
× RELATED மேட்டூர் வலதுகரை வாய்க்காலில் கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும்