லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் லக்னோ நகரிலிருந்து ஐ5-319 என்ற ஏர் ஆசியா விமானம், கொல்கத்தா நோக்கி புறப்பட்ட சிறிது நேரத்தில் பறவை மோதியதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் மற்றும் விமானத்திற்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறதா? என்பது பற்றி பரிசோதனை நடந்து வருகிறது. பயணிகளை வேறு விமானத்தில் அனுப்பி வைப்பதற்கான முயற்சிகளில் விமான நிறுவனம் ஈடுபட்டுள்ளது.