சென்னை: குஜராத் கலவரம் தொடர்பான பிபிசி ஆவணப்படத்துக்கு இந்தியாவில் தடை விதித்தது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப திமுக முடிவு செய்துள்ளது. பங்குசந்தையில் அதானி குழுமத்தால் ஏற்பட்ட இழப்பு குறித்து வெளியான ஆய்வறிக்கை தொடர்பாகவும் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப முடிவு செய்துள்ளனர். சென்னையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் திமுக எம்.பி.க்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்