ஈரோடு: இடைதேர்தலை ஒட்டி ஈரோட்டில் உள்ள வங்கிகளுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரி கட்டுப்பாடு விதித்துள்ளார். சந்தேகத்துக்கிடமான பணப் பரிவர்த்தனை நடந்தால் உடனே தகவல் தெரிவிக்க தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்கும் வகையில் மாவட்ட தேர்தல் அதிகாரி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.