கோவை: குற்றாலம் அருவிக்கு செல்வதற்கான நுழைவு கட்டணத்தில் மோசடி செய்த முன்னாள் வனச்சரகர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலி ரசீது கொடுத்து ரூ.58 லட்சம் மோசடி செய்ததாக முன்னாள் வனச்சரகர் சரவணன், முன்னாள் வனவர் ராஜேஷ்குமார் மீது புகார் எழுந்துள்ளது. இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட குற்றப் பிரிவு போலீசில் வனத்துறை அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர்.