×

ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் நிதி நிறுவனம் நடத்தி ரூ10 கோடி மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம்

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் சிட்பண்ட்ஸ் நடத்தி ரூ.10 கோடி மோசடி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் சிட்பண்ட்ஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் ‘பிடி டெக்ஸ்’ என்ற பெயரில் 7 பேர் பங்குதாரர்களாக கொண்டு, டெக்ஸ்டைல்ஸ் நடத்தி வருகின்றனர். அதில் சிட்பண்ட்சும் நடத்தி வந்தனர். இதன்மூலம் கடந்த 40 ஆண்டு காலமாக அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் சீட்டு பணம் வசூல் செய்துள்ளனர். இந்நிலையில், கடந்த ஓராண்டு காலமாக 85 நபர்களுக்கு மேல் ரூ.10 கோடி வரை சீட்டுப்பணம் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர்.

இதனால், பாதிக்கப்பட்டவர்கள் தளவாய்புரம் காவல் நிலையத்தில் அளித்தனர். 6 மாதமாகியும் நடவடிக்கை இல்லை. இதனால், பாதிக்கப்பட்ட பொதுமக்கள்சிட்பட்ண்ஸ் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தளவாய்புரம் காவல்துறையினர் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். பணம் கொடுக்கவில்லை என்றால், அடுத்தகட்டமாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் எஸ்பி அலுவலகத்தில் போராட்டம் நடத்துவோம் என பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தெரிவித்தனர்.

Tags : Dalavaipuram ,Rajapalayam , ₹10 crore scam by a financial institution in Dalavaipuram near Rajapalayam: Victims protest
× RELATED அடிக்கடி ஏற்படும் பிரச்னைக்கு...