
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில் சிவபிரசாந்த் போட்டியிடுவார் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளார். அமமுக ஈரோடு மாநகர கிழக்கு மாவட்ட செயலாளராக உள்ளார் எ.எம்.சிவபிரசாந்த் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் தேர்தல் பரப்புரை பணிகளை நாங்கள் மேற்கொள்வோம் எனவும் அவர் தெரிவித்தார்.