காஷ்மீர்: இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி இன்று காஷ்மீரில் தனது பயணத்தை தொடங்கினார். பனிஹல் என்ற இடத்தில் தொடங்கிய பேரணியில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவும் பங்கேற்றார். ஜம்முவில் ராகுல் நடைப்பயணத்தில் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லாவும் பங்கேற்றார்.