×

தென்காசியில் திருமணமான பெண் கடத்தப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைப்பு

தென்காசி: தென்காசியில் திருமணமான பெண் கடத்தப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கொட்டாகுளத்தைச் சேர்ந்த வினித், செங்கோட்டை பிரானூரைச் சேர்ந்த கிருத்திகா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கிருத்திகாவின் பெற்றோர் நேற்று வலுக்கட்டாயமாக வினித்திடமிருந்து பிரித்து கடத்திச் சென்று விட்டனர். கடத்தல் சம்பவம் தொடர்பாக கிருத்திகாவின் பெற்றோர் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து குற்றாலம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Tags : South Kasi , Tenkasi, married woman, kidnapping, 4 squads organization
× RELATED ராஜபாளையம் தொகுதியில் புதிதாக அரசு...