×

தமிழ்நாட்டு வரலாற்றில் இதுபோன்ற ஒரு ஆளுநரை பார்க்கவில்லை: துரை வைகோ பேச்சு

சென்னை: தமிழ்நாட்டு வரலாற்றில் இப்படிப்பட்ட ஆளுநரை நான் பார்க்கவில்லை என துரை வைகோ கூறினார். ஆவடி மாநகராட்சி அருகே மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் மதிமுக சார்பில் நேற்று நடந்தது. மாநில தேர்தல் பணி செயலாளர் அந்திரிதாஸ் தலைமை வகித்தார். இதில் தலைமை கழகச் செயலாளர் துரை வைகோ கொடியேற்றி மலர் தூவி ஜோதி தீபம் ஏற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் நிருபர்களிடம் துரை வைகோ பேசியதாவது:

தமிழ்நாடு என்பது வெறும் பெயர் கிடையாது. அது உணர்வு. அதை கொஞ்சம் கூட மதிக்காமல் தமிழ்நாடு என்பதற்கு மாறாக தமிழகம் என்று அழைத்தது மட்டுமில்லாமல், பல நிகழ்வுகளில் அதுதான் சரி சொல்லி இருக்கிறார் தமிழ்நாடு ஆளுநர். அதைவிட முக்கியம் என்பது இந்திய அரசியல் சட்டத்தை வடிவமைத்தவர் அம்பேத்கரின் பெயரையும் சொல்லாமல் இருந்ததும் அதேபோல், நமக்கு சமூகநீதி கொடுத்த தந்தை பெரியார் பெயர், அறிஞர் அண்ணா பெயரும் சொல்லவில்லை. கர்ம வீரர் காமராஜரின் பெயரையும் சொல்லவில்லை. இப்படிப்பட்ட ஆளுநரை தமிழ்நாட்டு வரலாற்றிலே நான் பார்க்கவில்லை, என்றும் பார்த்திருக்க முடியாது என பேசினார்.


Tags : Tamil Nadu ,Durai Vaiko , Tamil Nadu never saw such a governor in its history: Durai Vaiko speech
× RELATED தமிழகம் முழுவதும் மக்களிடம் எழுச்சி...