சென்னை தீவுத்திடலில் நடைபெற்று வரும் சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியில் ராட்டினத்தில் திடீரென பழுது ஏற்பட்டது. மிகப்பெரிய அளவிலான ராட்டினத்தில் பழுது ஏற்பட்டதை அடுத்து உடனடியாக நிறுத்தப்பட்டதால் சேதம் தவிர்க்கபப்ட்டுள்ளது. ராட்டினம் உடனடியாக நிறுத்தப்பட்டு அதில் இருந்தவர்கள் பாதுகாப்பாக கீழே இறக்கிவிடப்பட்டனர்.