நாகர்கோவில்: திராவிட கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் உடல் நலம் பாதிக்கப்பட்டு, குமரி மாவட்டம் ஆசாரிபள்ளம்அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவரை நேற்று மாலை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் பார்த்து நலம் விசாரித்தார். இதன்பின்னர் மேயர் மகேஷ் கூறும்போது, ‘’முதல்வர் மு.க.ஸ்டாலின் என்னிடம் போனில் தொடர்பு கொண்டு நாஞ்சில் சம்பத் உடல் நலம் குறித்து விசாரிக்க கேட்டுக்கொண்டார்.
இன்று (நேற்று) மீண்டும் வந்து பார்த்தேன். தற்போது அவரது உடல் நலம் முன்னேற்றம் அடைந்துள்ளது. உயரிய சிகிச்சை அளிக்க டீனிடம் கூறியுள்ளேன்’’ என்றார்