சென்னை: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பெண் ஊழியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக செயல் அலுவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஏகாம்பரநாதர் கோயில் செயல் அலுவலர் வேதமூர்த்தியை திருச்செந்தூருக்கு அறநிலையத்துறை பணியிட மாற்றம் செய்தது. பெண் ஊழியரிடம் வேதமூர்த்தி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சிசிடிவி காட்சி வலைதளங்களில் வெளியானதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.