புதுடெல்லி: இன்னும் 5 ஆண்டுகளில் இந்தியா- எகிப்து இடையே ரூ.97 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் நடைபெறும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். டெல்லியில் இன்று நடக்கும் குடியரசு தின விழா அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க எகிப்து நாட்டின் அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி 3 நாள் பயணமாக நேற்று முன்தினம் டெல்லி வந்தார். நேற்று காலை ஜனாதிபதி மாளிகைக்கு வந்த அப்தெல்லுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் அவரை வரவேற்றனர்.