×

தாம்பரத்தில் 2012ல் தனியார் பள்ளி பேருந்து ஓட்டையில் இருந்து விழுந்து மாணவி பலியான வழக்கில் கைதான 8 பேரும் விடுதலை..!!

செங்கல்பட்டு: தாம்பரத்தில் 2012ல் தனியார் பள்ளி பேருந்து ஓட்டையில் இருந்து விழுந்து மாணவி சுருதி இறந்த வழக்கில் 8 பேர் விடுதலை செய்யப்பட்டனர். வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 8 பேரையும் விடுதலை செய்து செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. 2012 ஜூன் 25ல் நடந்த சம்பவத்தில் பள்ளி தாளாளர், மோட்டார் வாகன ஆய்வாளர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் நீதிபதி காயத்ரி தீர்ப்பு வழங்கினார்.

Tags : Tambara , Tambaram, school bus, student sacrifice, liberation
× RELATED பெட்ரோலில் தண்ணீர்: இந்தியன் ஆயில்...